உள்ளூர் செய்திகள்

சேலத்துக்கு சரக்கு ரெயிலில் வந்த3,300 டன் பருப்பு, கோதுமை

Published On 2023-05-06 09:44 GMT   |   Update On 2023-05-06 09:44 GMT
  • கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.
  • 3,300 டன் பருப்பு, கோதுமை ஆகியவை சரக்கு ரெயில் மூலம் சேலம் செவ்வாய் பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வந்தது.

சேலம்:

சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வட மாநிலங்களில் இருந்து கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 3,300 டன் பருப்பு, கோதுமை ஆகியவை சரக்கு ரெயில் மூலம் சேலம் செவ்வாய் பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் இருந்து பருப்பு, கோதுமை மூட்டைகளை இறக்கி லாரிகளில் ஏற்றி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News