கல்வெட்டை சீரமைக்க அளவீடு செய்யும் பணி
- மழைநீர் வடிவதில் சிரமமும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் இருந்து வந்தது.
- தனியார் இடம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை அளவீடு செய்து ஆய்வு செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே மடவளா கம் சாலையில் கடந்த சில ஆண்டுக்கு முன்னர் சிறுபாலம் கல்வெட்டு அமைக்க ப்பட்டது. இதனால் அப்பகுதியில் மழைநீர் வடிவதில் சிரமமும், போக்கு வரத்திற்கு இடையூறாகவும் இருந்து வந்தது. இதனை சீரமைத்திட பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் சரிசெய்து அகலப்படுத்திட மாவட்ட கலெக்டர் மகாபாரதி நெடு ஞ்சாலைத்துறை அதிகாரிக ளை நேரில் வரவழைத்து அறிவுறுத்தினார்.
இதனையடுத்து கல்வெர்ட் இருக்கும் பகு தியை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சசிகலாதேவி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், பணிதள மேற்பா ர்வையா ளர் விஜயேந்திரன் மற்றும் நகர சர்வேயர், சாலை ஆய்வாளர் உள்ளிட்டோர் அந்த பகுதியில் நெடுஞ்சா லைத்துறை, நகராட்சி, தனியார் இடம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதனை அளவீடு செய்து ஆய்வு செய்தனர். விரைவில் சீரமைக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.