உள்ளூர் செய்திகள்

அமைச்சர் எ.வ.வேலுவிடம் ராஜா எம்.எல்.ஏ. மனு அளித்தார். அருகில் வணிகவரித்துறை, பத்திரபதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி உள்ளார்.

சங்கரன்கோவிலில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும்- அமைச்சர் வேலுவிடம் ராஜா எம்.எல்.ஏ. மனு

Published On 2022-12-24 08:30 GMT   |   Update On 2022-12-24 08:30 GMT
  • கோவில்பட்டி முதல் பருவக்குடி வரை உள்ள சாலையில் நடுவப்பட்டி பகுதி வரை மட்டுமே சாலை விரிவாக்க பணிகள் செய்யப்பட்டுள்ளது.
  • அடைக்கலாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

சங்கரன்கோவில்:

நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலுவை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மனு அளித்தார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கோவில்பட்டி முதல் பருவக்குடி வரை உள்ள சாலையில் நடுவப்பட்டி பகுதி வரை மட்டுமே சாலை விரிவாக்க பணிகள் செய்யப்பட்டுள்ளது. நடுவபட்டியில் இருந்து பருவக்குடி வரை சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும், குருவிகுளம் ஒன்றியம் குருவிகுளம், ராமலிங்கபுரம், அத்திப்பட்டி வழியாக கழுகுமலை செல்லும் சாலை பழுதடைந்து உள்ளதால் அதனை சரி செய்ய வேண்டும். திருவேங்கடம் முதல் ஆலங்குளம் வரை குருவிகுளம் வழியாக செல்லும் சாலையை விரிவுபடுத்த வேண்டும் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சங்கரன்கோவில் முதல் நெல்லை வரை செல்லும் சாலையில் இருந்து அடைக்கலாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும்.

மேலும் சுமார் 60 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சங்கரன்கோவில் நகர்ப்பகுதியில் வியாபார ரீதியாகவும், கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சங்கரன்கோவில் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புறவழிச்சாலை புளியம்பட்டியில் இருந்து களப்பாகுளம், நெடுங்குளம் வாயிலாக தெற்குத் சங்கரன்கோவில் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள சங்கரன் கோவில் புறவழிச்சாலை பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News