உள்ளூர் செய்திகள்

நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு:மூதாட்டியை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது

Published On 2023-02-22 10:08 GMT   |   Update On 2023-02-22 10:08 GMT
  • கலாவதி (வயது 60). இவர் தனியாக வசித்து வருகிறார்,. தண்டபாணி குடிபோதையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கலாவதியை கடுமையாக தாக்கியுள்ளார்,
  • தண்டபாணியை பொதுமக்கள் மடக்கி பிடித்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கடலூர்:

நெல்லிக்குப்பம் அடுத்த பல்லவராயநத்தம் சேர்ந்தவர் கலாவதி (வயது 60). இவர் தனியாக வசித்து வருகிறார்.இந்த நிலையில் கலா வதிக்கும் அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி (வயது 43) என்பவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. மேலும் மூதாட்டி கலாவதி அவ்வப் போது தண்டபாணியை ஒருமையில் திட்டி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு தண்டபாணி குடிபோதையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கலாவதியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது

.இதனால் கலாவதி அலறி கத்தியதால் அக்கம் பக்கத்தை சேர்ந்த பொது மக்கள் உடனடியாக வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்து குடி போதையில் தண்டபாணி வெளியில் தப்பி ஓட முயற்சி செய்தார். அப்போது தண்டபாணியை பொதுமக்கள் மடக்கி பிடித்து௹௹௹னர். அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டபாணியை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பலத்த காயம் அடைந்த மூதாட்டி கலாவதியை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து மூதாட்டி கலாவதி உறவினர் சந்திர சேகர் முன் விரோதம் காரணமாக கலாவதியை தாக்கி கற்பழிக்க முயற்சி செய்ததாக புகார் அளித் ததின் பேரில் நெல்லிக் குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News