உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

நத்தம் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

Published On 2023-10-07 11:46 IST   |   Update On 2023-10-07 11:46:00 IST
  • ஸ்டாப்பில் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த வாலிபர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்லை வீசி உடைத்தார்.
  • புகாரின்பேரில் நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

நத்தம்:

நத்தம் முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் அப்துல்சலாம். இவரது மகன் ராஜாமுகமது(35). இவர் திண்டுக்கல்லில் இருந்து காரைக்குடிக்கு சென்ற அரசு பஸ்சில் நத்தத்தில் ஏறி ஏரக்காபட்டிக்கு டிக்கெட் எடுத்துள்ளார்.

ஆனால் பஸ் அங்கே நிற்காமல் சமுத்திராபட்டி பகுதியில் போய் நின்றது. இதில் ஆத்திரமடைந்த ராஜாமுகமது பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்லை வீசி உடைத்தார். இச்சம்பவம் குறித்து டிரைவர் நத்தம் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாமுகமதுவை கைது செய்தனர்.

Tags:    

Similar News