உள்ளூர் செய்திகள்

சேலம் நூலகத்தில் மாணவிகளிடம் கேலி கிண்டல் செய்த வாலிபர் கைது

Published On 2023-04-02 09:04 GMT   |   Update On 2023-04-02 09:04 GMT
  • சேலம் தொங்கும் பூங்கா அருகில் மாவட்ட நூலகம் செயல்பட்டு வருகிறது.
  • அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென மாணவிகளிடம் கேலி கிண்டலில் ஈடுபட்டார்.

சேலம்:

சேலம் தொங்கும் பூங்கா அருகில் மாவட்ட நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கல்லூரி மாணவ-மாணவிகள் அடிக்கடி வந்து புத்தகங்களை படிப்பது வழக்கம்.

சம்பவத்தன்று மாணவிகள் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென மாணவிகளிடம் கேலி கிண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் நூலகத்தி லிருந்து உடனடியாக வெளியேறினர்.

மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதுகுறித்த தகவலின் பேரில் அஸ்தம்பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவு களை ஆய்வு செய்தனர்.

அப்போது மாணவிகளிடம் கேலி கிண்டல் செய்தவர் சேலம் கிச்சிபாளையம் எஸ்.எம்.சி. காலனி பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் சரத்குமார் (வயது 24) என்பது தெரியவந்தது. அவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News