உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி பணம், செல்போன் பறித்த சிறுவன் கைது: மேலும் 3 பேருக்கு வலை வீச்சு

Published On 2023-10-28 09:20 GMT   |   Update On 2023-10-28 09:20 GMT
  • கடலூர் அடுத்த பெரிய காரைக்காடு பகுதியில் சாலை ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார்.
  • இந்நிலையில் கடலூர் முதுநகர் மணிகூண்டு அருகே போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

கடலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரை சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 41). இவர் கடலூர் அடுத்த பெரிய காரைக்காடு பகுதியில் சாலை ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அரிதாசிடம் கத்தியை காட்டி மிரட்டினர். இதில் அரிதாஸ் வைத்திருந்த ரூ.600 பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துகொண்டு, அரிதாசினை தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.

இந்நிலையில் கடலூர் முதுநகர் மணிகூண்டு அருகே போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை சோதனை செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் லாரி டிரைவர் அரிதாசை தாக்கி பணம் பறித்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து புதுவை மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்த வழிப்பறியில் தொடர்புடைய மேலும் 3 வாலிபர்களை கடலூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News