உள்ளூர் செய்திகள்
ரத்ததான முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
- ரத்ததான முகாமிற்கு ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினர்.
- சிறப்பு அழைப்பாளராக ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி:
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு நிறுவனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினர். நகர்மன்ற உறுப்பினர்கள் லவராஜா சண்முகவேல் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் கமல வாசன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரத்ததான முகாமை ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் தொடங்கி வைத்து ரத்த தானம் செய்தவர்களை வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் அமளி பிரகாஷ், மகேஷ், கேசவன், சந்திரசேகர், மருத்துவர் தேவசேனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறுவன ராஜேந்திரன் நன்றி கூறினார்.