வடலூர் நகராட்சியை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல்: 52 பேர் கைது
- கோவிலானூர் மணிகண்டன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
வடலூர் நகர பாரதீய ஜனதா கட்சி சார்பாக கடந்த 17-ந் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி, படத்தை வடலூர்நகராட்சி அலுவலகத்தில் பொரு த்தப்பட்டது. அந்த படத்தை நகராட்சியில் கலெக்டர் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டதால் அகற்ற ப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பா.ஜ.க.வினர்,வடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். பதட்டமான சூழல் உருவா னதால் போலீசார் பா.ஜ.க. வினரைதடுத்ததால், கோவி லானூர் மணிக ண்டன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நகரத்தலைவர் திருமுருகன் மாவட்ட செயலாளர்கள் பெருமாள், கார்த்திகேயன், மூர்த்தி சிறப்பு அழைப்பாளர் மாநில செயற்குழு உறுப்பினர் தேவசரவணா சுந்தரம் ,விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாளர் செல்வமணி ,ஓ பி சி அணி மாநில செயலாளர் அரங்கநாதன், இளைஞர் அணி மாநில செயலாளர் ரமேஷ், மகளிர் அணி மாநில செயலாளர் சுபஸ்ரீ தவபாலன் ,மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது வடலூர் போலீசார் பாஜக நிர்வாகிகள் 52 பேரை கைது செய்தனர்.