உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க. நெசவாளர் பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு வேஷ்டி- சேலை வழங்கப்பட்டது.

பா.ஜ.க. சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-10-02 10:11 GMT   |   Update On 2022-10-02 10:11 GMT
  • பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பல் பரிசோதனை மருத்துவ முகாம், மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.
  • விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர்:

தஞ்சையில் பா.ஜ.க. நெசவாளர் பிரிவு சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல் பரிசோதனை மருத்துவ முகாம், மரக்கன்று வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் பொதுமக்களுக்கு பல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. மரக்கன்றுகளும் வழங்கப்ப ட்டன. 702 பேருக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு நெசவாளர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் யு.என்.உமாபதி தலைமை தாங்கி னார். நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் கோபி, நெசவாள பிரிவு மாவட்ட பார்வையாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ். ராமலிங்கம், நெசவாளர் பிரிவு மாநில பார்வையாளர் சண்முகராஜ், மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News