உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்
- ராசாவுக்கு ,எதிராக பாஜக மகளிர் அணியினர் எதிர்ப்பு குரல் எழுப்பினர்
- ராஜாவை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்.
ஊட்டி
ஊட்டியில் மாவட்ட பாஜக சார்பில் ராசாவின் மதப்போக்கு பிரிவினையை கைவிடக்கோரி மண்டல் தலைவர் பிரவீன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது
மாவட்டத் தலைவர் மோகன்ராஜ்கௌடா , மாவட்ட பொதுச் செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட செயலாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நகர நிர்வாகிகள் பொதுச்செயலாளர்கள் சுரேஷ்குமார் ,ராஜேந்திரன், நகர துணைத் தலைவர் சுதாகர் ,ஹரி கிஷன் ,மணி ஸ்மூத்லி, நகர மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ,தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்,
ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராசாவுக்கு ,எதிராக பாஜக மகளிர் அணியினர் எதிர்ப்பு குரல் எழுப்பினர்
நீலகிரி மாவட்டத்தில் ராசா ஒரு இந்து வீட்டிலேயு கூட ஓட்டு கேட்க முடியாது. அவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் உதகை நகர பாஜக நிர்வாகிகள் கூறினர்