உள்ளூர் செய்திகள்
சாத்தான்குளம் பகுதியில் 'பைக்' திருடர்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சி போலீசார் வெளியீடு
- தெருக்களில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டு திருடர்கள் திருடி வருகின்றனர்
- சி.சி.டி.வி. காமராவில் பதிவான காட்சி புகைப்படங்களை வலைதளங்களில் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் பஜார் மற்றும் தெருக்களில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டு திருடர்கள் திருடி வருகின்றனர். அந்த காட்சி சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சி.சி.டி.வி. காமராவில் பதிவான காட்சி புகைப்படங்களை வலைதளங்களில் போலீசார் வெளியிட்டு அந்த நபர் குறித்த தகவல்களை தெரிந்தால் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.