உள்ளூர் செய்திகள்
- 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- 2-வது வார்டு உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பெட்டை லைன் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரியான நடைபாதை இல்லாததால் மழைக்காலங்களில் குழந்தைகள், முதியோர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்டு 2-வது வார்டு உறுப்பினர் விக்டர் வசந்த் கேத்தி பேரூராட்சி தலைவர் முன்னிலையில் அப்பகுதியில் நடை பாதை அமைக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பூமி பூஜை கேத்தி பேரூராட்சி தலைவர் ஹேமா மாலினி தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து பேரூராட்சி தலைவர் ஹேமா மாலினி மற்றும் 2-வது வார்டு உறுப்பினர் விக்டர் வசந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.