உள்ளூர் செய்திகள்

துப்புகானப்பள்ளியில் பூமிபூஜை செய்து திட்டபணிகளை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்த காட்சி. 

ரூ.1.16 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

Published On 2023-08-02 15:39 IST   |   Update On 2023-08-02 15:39:00 IST
  • ரூ.1கோடியே 16 லட்சத்து மதிப்பிலான கனிமங்கள் மற்றும் குவாரிகள் மேம்பாட்டு திட்டத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.
  • பூஜைக்கு பின்பு அமைச்சர் சின்னபேட்டுதானப் பள்ளியில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

சூளகிரி,

வேப்பனப் பள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியம் துப்புகானப்பள்ளி ஊராட்சிக்கு அரசுதிட்ட பணியை உணவு துறை மற்றும் உணவு பொருள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். அவரை சூளகிரி உத்தனப்பள்ளி நுழைவு சாலையில் தி.மு.க. எம். எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பூங்கொத்துமாலை பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வேப்பனஅள்ளியை அடுத்த துப்பு காணப்பள்ளி ஊராட்சி, சின்னபேட்டு காணப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.1கோடியே 16 லட்சத்து மதிப்பிலான கனிமங்கள் மற்றும் குவாரிகள் மேம்பாட்டு திட்டத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில் உணவு மற்றும் உணவுப் பொருள்வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பூமிபூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துப்பு காணப்பள்ளிஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சரயு, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான பிரகாஷ், பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன், ஓசூர் மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் சினிவாசன், ஷேக் ரஷீத், பாக்கியராஜ், வீராரெட்டி, சுகுகுமார், பி.டி.ஓ. விமல் ரவிக்குமார், டி.எஸ்.பி. முரளி மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பூஜைக்கு பின்பு அமைச்சர் சின்னபேட்டுதானப் பள்ளியில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்பு மாதர் சங்கத்தினர் தங்கள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என சங்க நிர்வாகி சரஸ்வதி மற்றும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

Similar News