உள்ளூர் செய்திகள்

தொடர்ந்து 102 அடியில் நீடிக்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம்

Published On 2022-10-26 09:43 GMT   |   Update On 2022-10-26 09:43 GMT
  • கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
  • மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள் நீர்நிலைகள் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.

மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி பவானி சாகர் அணை 102 அடியை எட்டியது.

அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விட ப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது.தொடர்ந்து இன்று 10 -வது நாளாக பவானிசாகர் அணை 102 அடியில் நீடிக்கிறது

அணைக்கு வினாடிக்கு 2600 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 2600 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ள ளவு எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News