உள்ளூர் செய்திகள்
பேரணியில் கலந்து கொண்ட பா.ஜனதாவினர்.

செங்கோட்டையில் பாரதீய ஜனதா கட்சி பேரணி

Published On 2022-08-11 09:08 GMT   |   Update On 2022-08-11 09:08 GMT
  • 75-ம்ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.
  • பேரணிநகரமுக்கிய வீதிகளின்வழியாக சென்று பஸ்நிலையம் அருகில் இருக்கும். சுதந்திரபோராட்ட தியாகி வாஞ்சிநாதன் சிலை முன்பு வந்தடைந்தது.

செங்கோட்டை:

செங்கோட்டையில் பாரதீயஜனதாகட்சி நகர இளைஞர் அணி சார்பில் 75-ம்ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் அனைவரும் கையில் தேசிய கொடியை ஏந்தி நடைபேரணி சென்றனர்.

இந்த பேரணி தாலூகாஅலுவலகம் முன்பு இருந்து புறப்பட்டது. இளைஞர்அணித்தலைவர் வீரசிவா தலைமை தாங்கினார்.

பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் வேம்புராஜ். பொதுச்செயலாளர்கள் பாலகிருஷ்ணன், கோமதிநாயகம்.ஒ.பி.சி.அணி மாவட்ட தலைவர் மாரியப்பன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

பேரணிநகரமுக்கிய வீதிகளின்வழியாக சென்று பஸ்நிலையம் அருகில் இருக்கும். சுதந்திரபோராட்ட தியாகி வாஞ்சிநாதன் சிலை முன்பு வந்தடைந்தது.

பின்பு வாஞ்சிசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்புசாரா பிரிவு துணை தலைவர் பேச்சி முத்து, மாவட்ட கூட்டுறவுபிரிவு செயலாளர் வர்மா தங்கராஜ், மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு துணைத்தலைவர் சென்பாகராஜன் நகர பொருளாளர் ராம்குமார், இளைஞரணி துணைத்தலைவர் அருண்சங்கர், பொதுச் செயலாளர் ஸ்ரீராம்கார்த்திக், செயலாளர்கள் முத்துக்குமார், மகாராஜன், பொருளாளர் கார்த்திக் மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News