உள்ளூர் செய்திகள்

பாரத மாதா படத்திற்கு மலர் தூவி வழிபாடு நடத்தப்பட்டது.

பாளை சாரதா கல்லூரியில் பாரத மாதா பூஜை

Published On 2023-01-11 09:24 GMT   |   Update On 2023-01-11 09:24 GMT
  • பாளை சாரதா மகளிர் கல்லூரியில் பாரத மாதா பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
  • பேராசிரியர் பாலமுருகன் கலந்து கொண்டு பாரதமாதா உருவாகிய சூழல் குறித்து விளக்கினார்.

நெல்லை:

பாளை சாரதா மகளிர் கல்லூரியில் பாரத மாதா பூஜை நிகழ்ச்சி கல்லூரி வழிபாட்டு கூடத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் பாலமுருகன் கலந்து கொண்டு பாரதமாதா உருவாகிய சூழல் குறித்து விளக்கினார். மேலும் தேச தலைவர்களின் தேசப்பற்றினை குறித்தும் மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் மனோன்மணியம் பல்கலை கழக உயிர் தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் வெங்கடேஷ், சாரதா கல்லூரி முதல்வர் கமலா ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரியின் கல்வி இயக்குனர் சந்திரசேகரன், பாரத மாதா மந்திரங்கள் கூற பேராசிரியர்களும், மாணவிகளும், பாரதமாதாவிற்கு மலர் தூவி வழிபாடு செய்தனர். 

Tags:    

Similar News