உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவ-மாணவிகள்.


பிளஸ்-1 பொதுத்தேர்வில் பாரத் மாண்டிசோரி மாணவர்கள் சாதனை

Published On 2022-06-28 06:55 GMT   |   Update On 2022-06-28 06:55 GMT
  • பாரத் மாண்டிசோரி பள்ளியில் 62 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 பொதுத் தேர்வு எழுதியிருந்தனர். இதில் அனைவரும் முழுத் தேர்ச்சி பெற்றுச் சாதனை படைத்தனர்.
  • வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி, ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.

தென்காசி:

இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் 62 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 பொதுத் தேர்வு எழுதியிருந்தனர். இதில் அனைவரும் முழுத் தேர்ச்சி பெற்றுச் சாதனை படைத்தனர்.

மாணவி ப்ரிஷா தமிழ் - 98, ஆங்கிலம் - 94, இயற்பியல் -100, வேதியியல் -85, உயிரியல் - 96, கணிதம் - 95, மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்தார்.

மாணவி நிவேதிகா தமிழ் - 95, ஆங்கிலம் - 90, இயற்பியல் - 90, வேதியியல் - 84, உயிரியல் - 99, கணிதம் -100 மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்தார்.

மாணவர் சக்தீஸ்வரன் தமிழ் - 87, ஆங்கிலம் -71, பொருளியல் -96, வணிகவியல் -97, கணக்குப்பதிவியல் -100, வணிகக் கணிதம் - 95, மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்தார்.

பாரத் மாணவ- மாணவிகள் தமிழில் -98, சமஸ்கிருதம் -98, ஆங்கிலம் -95, கணிதம் -100, இயற்பியல் -100, கணக்குப்பதிவியல் -100, உயிரியல் -99, வணிகவியல் -97, பொருளியல் -96, வணிகக் கணிதம் -95, ஆங்கிலத் தகவல் தொடர்பு -94, கணிப்பொறி அறிவியல் -89, வேதியியல் -87, கணிணிப் பயன்பாட்டில் -86 மதிப்பெண்களும் அதிகமாக பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி, ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News