உள்ளூர் செய்திகள்

ஊட்டி ஜெ.எஸ்.எஸ்.கல்லூரி ஊழியருக்கு சிறந்த இளம் நூலகர் விருது

Published On 2023-08-22 15:37 IST   |   Update On 2023-08-22 15:37:00 IST
  • அரசு, தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் நூலகர்களுக்கு விருது வழங்கப்பட்டது
  • பார்மசி கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால் வாழ்த்து கூறினார்.

ஊட்டி,

சென்னை நூலகர் சங்கம் சார்பில் நூலக தந்தை எஸ்.ஆர். அரங்கநாதன் 126வது பிறந்தநாள் விழாநடைபெற்றது. இதில் நூலக உறுப்பினர்கள், புரவலர் சேர்க்கை, வாசகர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில், 50-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் நூலகர்களுக்கு சிறந்த நூலகர் விருது வழங்கப்பட்டது.

இதன்ஒருபகுதியாக நீலகிரிமாவட்டம் ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி நூலகர் சைலேந்திரகுமார், சிறந்த இளம் நூலகர் விருது பெற்று உள்ளார். அவருக்கு ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால், துணைமுதல்வர் கே.பி.அருண், முதன்மை அலுவலர் பசவன்னா மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags:    

Similar News