உள்ளூர் செய்திகள்
மரியா கலை- அறிவியல் பெண்கள் கல்லூரியில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
- கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் பக்ரீத் பண்டிகை சிறப்பு குறித்து பேசினார்.
- விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வள்ளியூர்:
வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்லூரி நிறுவன தலைவர் டி.டி.என்.லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
விழாவில் தமிழ்த்துறை உதவி பேராசிரியை லலிதா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் பக்ரீத் பண்டிகையின் சிறப்பு குறித்து மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.2-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி ஹபீபா பேகம் நன்றி கூறினார்.