உள்ளூர் செய்திகள்

உலிக்கல் தேர்வுநிலை பேரூராட்சியில் ஆதிவாசி பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

Published On 2022-09-28 09:51 GMT   |   Update On 2022-09-28 09:51 GMT
  • உலிக்கல் தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
  • நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

குன்னூர்

குன்னூர் அருகே உள்ள உலிக்கல் தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வார்டு பகுதிகளில் ஆதிவாசி பழங்குடி மக்களும், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.


உலிக்கல் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட 16-வது வார்டை சேர்ந்த சித்ரா என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு பேரூராட்சி தலைவர் ராதா தலைமையிலும், பேரூராட்சியின் துணைத் தலைவர் ரமேஷ்குமார் முன்னிலையிலும் நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செயல்அலுவலர் ரவிக்குமார், 18-வார்டு உறுப்பினர்கள் மற்றும் பெண்ணின் உறவினர்களும், பொதுமக்களும் நிறைமாத கர்ப்பிணியான சித்ராவுக்கு சந்தனம் மஞ்சள் குங்குமம் இட்டு மலர் தூவி வாழ்த்தி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

Tags:    

Similar News