உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் அய்யப்பன் கோவில் திருவிழா

Published On 2022-12-18 14:20 IST   |   Update On 2022-12-18 14:20:00 IST
  • 68-வது ஆண்டு திருவிழா, கடந்த மாதம் 17-ந் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
  • கலெக்டர் அம்ரித் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அய்யப்பன் கோவிலில், அய்யப்ப பஜனை சபா சார்பில் 68-வது ஆண்டு திருவிழா, கடந்த மாதம் 17-ந் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலையில் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு நிறமாலை பூஜை, அன்னதானம் மற்றும் அனைத்து மகளிர் சங்கத்தினரின் சார்பில் திருவிளக்கு பூஜை, ஹரிஹரன் பஜனை சபா சார்பில் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நேற்று காலை நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் அம்ரித் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். செண்டை மேளம் முழங்க தேர் புறப்பட்டு வென்லாக் சாலை, கமர்சியல் சாலை வழியாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. கால பைரவர் மாரியம்மன் கோவிலில் இருந்து பெண்கள் விளக்குகள் கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். அதில் பஞ்ச வாத்தியத்துடன் அய்யப்பன் பவனி வந்தார். இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News