உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்தபடம்.

கயத்தாறு அருகே விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-11-23 09:35 GMT   |   Update On 2022-11-23 09:35 GMT
  • அய்யனார்ஊத்து கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் குழந்தை பாதுகாப்பு, நலன் தொடர்பான போட்டிகள் நடைபெற்றது

கயத்தாறு:

கயத்தாறு தாலுகாவை சேர்ந்த அய்யனார்ஊத்து கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர் பைசல் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் இளங்கோ தலைமை தாங்கினார். கோவில்பட்டி சாய்லீங்க அறக்கட்டளையின் தலைவர் உமையலிங்கம், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தை திருமணம்,போதை பொருள் ஒழிப்பு, அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல ஆலோசகர் சுரேத்துவாணி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் குழந்தை பாதுகாப்பு, நலன் தொடர்பான போட்டிகள் நடைபெற்றது. இதில் 250 மாணவ- மாணவியர் பங்கேற்றனர்.

அறக்கட்டளையின் சார்பில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுமார் 350 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

பள்ளியின் உதவி தலைமைஆசிரியர் ராமலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News