பேரணியை டீன் ரேவதி கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
பேரணியாக சென்ற செவிலியர்கள்.
உலக ஹெபடைடிஸ் தினத்தையொட்டி நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி- கருத்தரங்கம்
- பேரணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள், பி.எஸ்.சி. பாரா மெடிக்கல் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- ஹெபடைடிஸ் ஏ மற்றும் இ வைரஸ் கிருமி, நம்முடைய கையை சுத்தம் செய்யாமல் உணவு உட்கொள்வதால் தாக்குகிறது.
நெல்லை:
கல்லீரலை தாக்கும் ஹெபடைடிஸ் கிருமிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்லீரலை காக்கவும் ஹெபடைட்டிஸ் பி வைரசை கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் பிறந்த தினமான இன்று உலக ஹெபடைடிஸ் தினம் உலகமெங்கும் அனுச ரிக்கப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு பேரணி
இதனையொட்டி நெல்லை மருத்துவக்கல்லூரி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி டீன் ரேவதி பாலன் தலைமையில் உலக கல்லீரல் அழற்சி தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
பேரணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள், பி.எஸ்.சி. பாரா மெடிக்கல் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர். பேரணியில் கல்லீரல் பாதுகாப்பு குறித்த பதாகை களை ஏந்தியும், விழிப்புணர்வு முழக்கங்களை கூறியும் சென்றனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி கண்காணிப்பாள ரும், கல்லீரல் மற்றும் குடல்நல, மருத்துவப் பிரிவு துறைத்தலை வருமான டாக்டர் கந்தசாமி என்ற குமார் வரவேற்று பேசினார். இந்திய மருத்து வக்கழக தலைவர் டாக்டர் சுப்பிரமணியன், செயலாளர் இப்ராஹிம், நிதி செயலாளர் பாபுராஜ் ஆகியோர் பங்கேற்றனர். சிறுநீரகவியல் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியம், உதவி உறைவிட மருத்துவர் ரவி, எஸ்தர், செவிலியர்கள், கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் டீன் ரேவதி பேசியதாவது:-
கருத்தரங்கில் ஹெபடைடிஸ் பி வைரசால் ஏற்படும் மஞ்சள் காமாலை நோய் குறித்தும், அதன் வகைப்பாடு குறித்தும் விளக்கப்பட்டது. இந்த வைரஸ், ஏ, பி, சி, டி மற்றும் இ என்று 5 வகையில் இருந்தாலும், ஏ மற்றும் இ வைரஸ் கிருமி, நம்முடைய கையை சுத்தம் செய்யாமல் உணவு உட்கொள்வதால் தாக்குகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு, ஒரு வாரத்தில் சரியாகிவிடும். மற்ற 3 ஹெபடைடிஸ் வைரஸ் கிருமிகளும் ரத்தம் வழியாகவும், பாதுகாப்பற்ற உடல் உறவாலும், மேலும் சுகாதார முறையில் பராமரிக்கப்படாமல் பச்சை குத்துதல், காது குத்துதல் மற்றும் ஒரே ஷேவிங் செட்டை பலர் உபயோகித்தல் போன்றவற்றால், இந்த வைரஸ் கிருமி பரவுகிறது. இக்கிருமி தாக்கிய சில நாட்களில், உடல் சோர்வு, மூட்டுவலி, வாந்தி, வலதுபுற அடி வயிற்றுவலி ஆகியவை ஏற்படும். ஹெபடைடிஸ் வைரஸ் தாக்காமல் இருக்க, குழந்தை பிறந்து 24 மணி நேரத்துக்குள் "இமினோ குளோபின்' தடுப்பூசி போட வேண்டும். அதைத்தொடர்ந்து, 1 மற்றும் 6 மாதத்துக்குள் 3 முறை தடுப்பூசி போட வேண்டும். பெரிய வர்களுக்கு ஹெபடைடிஸ் வைரஸ் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அரசு மருத்துவ மனையில் ஹெச்.பி.எஸ்.எ.ஜி. என்ற ரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் உதவி பேராசிரியர் டாக்டர் ஷபிக் நன்றி கூறினார். ஏற்பாடுகளை குடல் கல்லீரல் மருத்துவ சிறப்புப்பிரிவின் துறைத்தலைவர் பேராசிரியர் கந்தசாமி என்ற குமார் செய்து இருந்தார். நிகழ்ச்சியை செவிலியர் பயிற்றுநர் செல்வன் தொகுத்து வழங்கினார்.