யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
- பள்ளி வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து அசத்தினர்.
- மாணவர்கள் கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிசபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி மற்றும் வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை மன்றம் இணைந்து சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி தலைமை வகித்தார். பேராசிரியர் செல்லம்மாள், பேராசிரியர் முனியசெல்வி, உடற்க ல்வி இயக்குனர் முரளி தரன், பேராசிரியர்ஷன்மு கவடிவேல், துணை பேராசி ரியர் சுரேஷ்கோபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்கள், மனவளக்கலை மாணவர்கள் பங்கேற்ற யோகா விழிப்புணர்வு பேரணியை பன்னீர்செல்வம் எம்எல்ஏ, சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மாணவர்கள்கையில் பதாகைகளை ஏந்தி, விழிப்பு ணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். பேரணியானது முக்கியவீ திகளின் வழியாக சென்று சீர்காழி பழையபேருந்துநிலையத்தை அடைந்தது. முன்னதாக பள்ளி வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து அசத்தினர்.