உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி நடந்தது.

வேதாரண்யத்தில், விழிப்புணர்வு பேரணி

Published On 2023-04-29 14:40 IST   |   Update On 2023-04-29 14:40:00 IST
  • அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  • கரியாபட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் பேரணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதேபோல், வேதார ண்யம் பஸ் நிலையம், ஆயக்காரன்புலம், குரவப்புலம் தாணிக்கோட்டகம், கோடியக்கரை, கோடிய க்காடு மூலக்கரை, கரியாபட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Tags:    

Similar News