உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி நடந்தது.

சீர்காழியில், விழிப்புணர்வு பேரணி

Published On 2023-10-11 09:44 GMT   |   Update On 2023-10-11 09:44 GMT
  • பேரணிக்கு துறை நிலைய அலுவலர் ஜோதி தலைமை வகித்தார்.
  • தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.

சீர்காழி:

சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியில் பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணிக்கு துறை நிலைய அலுவலர் ஜோதி தலைமை வகித்தார்.

கல்லூரி நிர்வாக குழு துணை தலைவர் விசாகர், நிதி செயலாளர் ராஜ்கமல் , கல்லூரி முதல்வர் அருள் செல்வன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முத்து குமாரசாமி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.

Tags:    

Similar News