உள்ளூர் செய்திகள்

பேரணியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

கண்ணநல்லூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2023-06-01 09:13 GMT   |   Update On 2023-06-01 09:13 GMT
  • ஒரு முறை உபயோகிக்கும் நெகிழியை தவிர்போம் என்று கோஷம் எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  • பொதுமக்களின் வீடுகள், கடைகளில் துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

வள்ளியூர்:

வள்ளியூர் யூனியன் கண்ணநல்லூர் ஊராட்சி சித்தூர் கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன் தலைமையில் சித்தூர் தேரடியில் இருந்து பஸ் நிலையம் வரை நடை பெற்றது. ஒரு முறை உபயோகிக்கும் நெகிழியை தவிர்போம் என்று கோஷம் எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொதுமக்களின் வீடுகள், கடைகளில் துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. பேரணியில் தூய்மை காவலர், சுகாதார பணியாளர், ஊராட்சி செயலர் இந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News