உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி லதா பேசியபோது எடுத்த படம்.

கொத்தடிமைகள் மீட்கப்படும்போது மறுவாழ்வுக்கு உதவி சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுதி

Published On 2022-07-19 08:08 GMT   |   Update On 2022-07-19 08:08 GMT
  • திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று குழந்தை கடத்தல் மற்றும் கொத்தடிமை ஒழிப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நடவடிக்கை எடுப்பதுடன் மறுவாழ்வுக்கு தொழில்தொடங்க உதவிகள் செய்து தரப்படும்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று குழந்தை கடத்தல் மற்றும் கொத்தடிமை ஒழிப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முதன்மை நீதிபதி லதா தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

குழந்தைகள் கடத்தலை உறுதி செய்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்போதுதான் உரிய இழப்பீடு கிடைப்பதுடன் கடத்தப்பட்டவர்களையும் மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்குவார்கள்.

கவர்ச்சிகரமான பேச்சுகளை நம்பி அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழகும்போது கடத்தல் சம்பவங்கள் நேர்ந்துவிடுகிறது. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நன்கு உணர்ந்து செயல்படவேண்டும். கொத்தடிமைகளாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விற்கப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தெரியவந்தால் உடனடியாக சட்டப்பணிகள் ஆணைக்குழுவை தொடர்பு கொள்ளலாம். அவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதுடன் மறுவாழ்வுக்கு தொழில்தொடங்க உதவிகள் செய்து தரப்படும். இதுகுறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி பாரதிராஜா, தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகி பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News