உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் ஆதிவாசி மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-07-01 15:33 IST   |   Update On 2022-07-01 15:33:00 IST
  • நீலகிரியில் பாலின உணர்வு மற்றும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிநடைபெற்றது.
  • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜே.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி மருந்து வேதியியல் துறையினர் செய்திருந்தனர்.

ஊட்டி:

புது டெல்லி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், மைசூரு ஜே எஸ் எஸ் உயர்க்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நீலகிரி இந்திய மருந்து சங்கம் மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்களுக்கான பாலின உணர்வு மற்றும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மஞ்சக்கோம்பையில் கிராமத்தில் நடைபெற்றது.

கல்லூரி விரிவுரையாளர் முனைவர் கோமதி சுவாமிநாதன் வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சி விளக்வுரை வழங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக மதுசூதனன் புரோகித் கலந்து கொண்டு சிறப்புரையாற்றனார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் தனபால், வேதியியல் துறை தலைவரும் இணை பேராசிரியருமான முனைவர் ஆர் காளிராஜன், டாக்டர்.பி.கனகாம்பாள், டாக்டர் எம்.தருணா, ஜெயக்குமார், டாக்டர் கீர்த்தனா. சி, டாக்டர் ஜி.என்.கே.கணேஷ், விரிவுரையாளர் முனைவர் ஸ்ரீகாந்த் ஜூபுடி, ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோமதி சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

2 நாட்கள் ந டந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜே.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி மருந்து வேதியியல் துறையினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News