உள்ளூர் செய்திகள்
நெல்லை பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் தேசிய குடற்புழு நீக்க தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கலந்து கொண்டு குடற்புழு உருவாக்கம், அதை நீக்குவது குறித்து எடுத்து கூறினார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு பொது சுகாதாரதுறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கலந்து கொண்டு குடற்புழு உருவாக்கம், அதை நீக்குவது குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்து கூறினார்.
தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் அவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. கல்லூரி நூலகர் முகம்மது முகைதீன் நன்றி கூறினார்.