உள்ளூர் செய்திகள்

கோவையில் காவல் உதவி எண்கள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம்

Published On 2023-05-10 09:29 GMT   |   Update On 2023-05-10 09:29 GMT
  • பெண்களுக்கு ஏதாவது இன்னல்கள் ஏற்படும் போது 181 என்ற எண்ணில் போலீசாரை தொடர்பு கொள்ளலாம்.
  • மேலும் எஸ்.ஒ.எஸ் என்னும் போலீசார் செயலி குறித்தும் போலீசார் எடுத்துரைத்தனர்.

குனியமுத்தூர்,

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, கோவை போலீசார்கள், பெண்கள் அதிகம் கூடி நிற்கும் பஸ் நிறுத்தங்களுக்கு சென்று, காவல் உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை பூ மார்க்கெட் பஸ் நிறுத்தத்தில் பெண்கள் அதிகமாக கூடியிருந்தனர்.

அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பெண்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். உதாரணமாக பெண்களுக்கு ஏதாவது இன்னல்கள் ஏற்படும் போது 181 என்ற எண்ணில் போலீசாரை தொடர்பு கொள்ளலாம். மேலும் குழந்தைகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் 1098 என்ற எண்ணில் அழைக்கலாம். பொதுவான அழைப்புகளுக்கு 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். முதியோர்களுக்கு இது ஏதும் பிரச்சினை என்றால் 14567 என்ற எண்ணில் அழைக்கலாம்.

மேலும் எஸ்.ஒ.எஸ் என்னும் போலீசார் செயலி குறித்தும் போலீசார் எடுத்துரைத்தனர். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை பெண்கள் அனைவரும் விரும்பி கவனித்தனர்.

Tags:    

Similar News