உள்ளூர் செய்திகள்

நெல்லையில் ஆட்டோ டிரைவர் மாயம்

Published On 2023-02-13 08:54 GMT   |   Update On 2023-02-13 08:54 GMT
  • சந்திப்பு ரெயில்நிலையத்தில் சுப்பிரமணியன் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.
  • கடந்த 1-ந்தேதி வெளியூருக்கு சவாரி செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

நெல்லை:

நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 33). இவரது மனைவி தங்க துரைச்சி. சந்திப்பு ரெயில்நிலையத்தில் சுப்பிரமணியன் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். கடந்த 1-ந்தேதி வெளியூருக்கு சவாரி செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது கடந்த 7-ந்தேதி வரை அழைப்பு சென்றும் அவர் போனை எடுக்கவில்லை. அதன்பின்னர் அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தங்க துரைச்சி தனது கணவர் காணாமல் போனது குறித்து சந்திப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News