உள்ளூர் செய்திகள்

கோவையில் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-09-21 14:32 IST   |   Update On 2023-09-21 14:32:00 IST
  • கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கினார்.
  • ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

ஆனைமலை அருகே உள்ள வி.கே.புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கினார்.

ஆனால் கடந்த சில மாதங்களாக தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதன் கரணமாக மணிகண்டன் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று இவர் வேட்டைக்காரன்புதூர்- சரளபதி ரோட்டில் வைத்து விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News