உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே தாய்-மகன் மீது தாக்குதல்

Published On 2023-05-26 09:12 GMT   |   Update On 2023-05-26 09:12 GMT
  • வெண்ணிலா பாரதியும், வேலுவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
  • வேலு உள்பட 4 பேர் காந்திமதி வீட்டிற்கு வந்து குழந்தையை கேட்டனர்.

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பை சேர்ந்தவர் மாடசாமி மனைவி காந்திமதி (வயது 45). இவரது மகள் வெண்ணிலா பாரதியும், அவரது கணவர் வேலுவும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். வெண்ணிலா பாரதியின் ஆண் குழந்தை காந்திமதியின் பராமரிப்பில் உள்ளது. வெண்ணிலா பாரதிக்கும், அவரது கணவர் வேலுக்கும் இடையே விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று வேலு, பலவேசகண்ணன், சுரேஷ் உள்பட 4 பேர் காந்திமதி வீட்டிற்கு வந்து குழந்தையை கேட்டனர். அதற்கு அவர் மறுத்ததால் அவரை தாக்கினர். இதனை தடுக்க வந்த காந்திமதியின் மகன் கார்த்திக் மணிகண்டனையும் தாக்கினர். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வேலு உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News