ஊத்தங்கரையில் பிளஸ்-2 மாணவர் விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை
- கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனின் தாத்தா இறந்துள்ள நிலையில் மாணவன் மனமுடைந்து காணப்பட்டார்.
- ஒரு அறையில் கயிற்றில் தூக்குபோட்டு கோபாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்,
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்துள்ள தொட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது17). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனின் தாத்தா இறந்துள்ளார். இதனால் மாணவன் மனமுடைந்து காணப்பட்டார்.
நேற்று வழக்கம் போல் அவர் பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலையில் விடுதிக்கு திரும்பிய நிலையில் சக மாணவர்களுடன் பேசாமல் இருந்துள்ளார். இரவு விடுதியில் உள்ள ஒரு அறையில் கயிற்றில் தூக்குபோட்டு கோபாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அைடந்தனர்.
இது குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்த மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.