உள்ளூர் செய்திகள்

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கருணை கொலை செய்யச் சொல்லி மனு கொடுத்த தூய்மை பணியாளர்கள்.

Published On 2022-11-08 10:24 GMT   |   Update On 2022-11-08 10:24 GMT
  • ஊதிய உயா்வு உள்பட ஒரு சில சலுகைகள் 7 ஆண்டுகளாக கிடைக்கவில்லை.
  • தன்னை கருணை கொலை செய்யும்படி மனு கொடுத்ததால் பரபரப்பு நிலவியது.

 ஊட்டி

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொ ணவக்கரை ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக துரைராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறாா். தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், ஊராட்சி நிா்வாகம் கடந்த பல மாதங்களாக தனக்கு ஊதியம் தரவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடா்பாக அவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கொணவக்கரை ஊராட்சியில் 1997-ம் ஆண்டில் நிரந்தரப் பணியாளராகப் பணியில் சோ்ந்தேன். எனக்கு ஊதிய உயா்வு உள்பட ஒரு சில சலுகைகள் 7 ஆண்டுகளாக கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

நான் அண்மையில் பக்கவாத நோயால் பாதிக்க ப்பட்டேன். சுய நினைவு இல்லாமல் இருந்த என்னை எனது குடும்பத்தாா் மைசூரு அழைத்து சென்று 2 மாதங்கள் மருத்துவமனை யில் வைத்து தீவிர சிகிச்சை அளித்தனா். இந்நிலையில், கடந்த பல மாதங்களாக எனக்கு ஊராட்சி நிா்வாகம் ஊதியம் அளிக்கவில்லை. இதனால், மருந்து வாங்கவோ, மருத்துவமனைக்கு செல்லவோ முடியாமல் அவதியடைந்து வருகிறேன். எனவே, என்னை கருணை கொலை செய்து விடுங்கள்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார். கலெக்டர் அலுவலகம் வந்து தூய்மை பணியாளர்ஒருவர் தன்னை கருணை கொலை செய்யும்படி மனு கொடுத்ததால் பரபரப்பு நிலவியது. 

Tags:    

Similar News