உள்ளூர் செய்திகள்

பச்சாபாளையத்தில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்

Published On 2023-02-04 07:35 GMT   |   Update On 2023-02-04 07:35 GMT
  • கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 8,15,484 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது.
  • புதிய பகுதி நேர நியாய விலைக்கடையானது வாரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் செயல்படும்.

காங்கயம் :

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், பாப்பினி ஊராட்சி பச்சாபாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடையை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 8,15,484 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. வரதப்பம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ள காங்கேயம் வட்டத்தில் 2 முழு நேர விலைக்கடைகளும் தற்போது பச்சாபாளையம் பகுதி நேர நியாய விலைக்கடையுடன் சேர்த்து மொத்தம் 2 முழு நேர நியாய விலைக்கடை மற்றும் 1 பகுதி நேர நியாய விலைக்கடைகளும் சேர்த்து மொத்தம் 3 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

வரதப்பம்பாளையம் முழு நேர நியாய விலைக்கடையில் 746 குடும்ப அட்டைகளில் 140 குடும்ப அட்டைகளை பிரித்தும் பாப்பினி முழு நேர நியாய விலைக்கடையில் 848 குடும்ப அட்டைகளில் 289 குடும்ப அட்டைகளை பிரித்து 429 குடும்ப அட்டைகளுடன் பச்சாபாளையத்தில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பகுதி நேர நியாய விலைக்கடையானது வாரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் செயல்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுசங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News