உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே மாணவர் மீது தாக்குதல்-வாலிபர் கைது

Published On 2023-03-15 14:57 IST   |   Update On 2023-03-15 14:57:00 IST
  • சேகரின் மகன் களக்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
  • சேகரின் மகனை இம்சனும், வினோத்தும் வழிமறித்து தாக்கினர்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள செட்டிமேடு வடக்குத்தெருவை சேர்ந்தவர் சேகர். பெயிண்டர். இவரது மகன் களக்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் புதூர் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது புதூரை சேர்ந்த நாராயணன் மகன் இம்சன் (19), அவரது அண்ணன் வினோத் (22) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்ததாக கூறி தகராறு செய்தனர்., இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று சேகரின் மகன் புதூர் பிள்ளையார்கோவில் அருகே வந்த போது இம்சனும், அவரது அண்ணன் வினோத்தும் வழிமறித்து அவரை அவதூறாக பேசி, தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. நாங்குநேரி டி.எஸ்.பி ராஜூ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி இதுதொடர்பாக இம்சனை கைது செய்தனர். அவரது அண்ணன் வினோத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News