உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது

Published On 2023-03-19 10:00 GMT   |   Update On 2023-03-19 10:00 GMT
  • டிராக்டரின் மூலம் அனுமதியின்றி மணல் அள்ளுவது தெரியவந்தது.
  • மாரண்டஅள்ளி போலீசார் மணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் மணல் அள்ளுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சின்னாறு அருகே உள்ள சக்கிலிநத்தம் பகுதியில் அய்யப்பன் மகன் மணி (வயது 24). தனக்கு சொந்தமான டிராக்டரின் மூலம் அனுமதியின்றி மணல் அள்ளுவது தெரியவந்தது. இதில் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் மாரண்டஅள்ளி போலீசார் மணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News