உள்ளூர் செய்திகள்

வேகமாக சென்ற இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

Published On 2023-10-22 06:28 GMT   |   Update On 2023-10-22 06:28 GMT
  • ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
  • பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதியில் இருசக்கர வாகனங்கள் அதிவேகமாக சென்று பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக காவல்துறைக்கு வந்த தகவல் வந்தது.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் நடேசன் இளங்கோவன் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற வாகனத்தை போலீசார் சோதனை செய்ததில் மது அருந்திவிட்டும், உறிய ஆவணம் இல்லாமலும் வந்த இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News