உள்ளூர் செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2022-09-15 15:25 IST   |   Update On 2022-09-15 15:25:00 IST
  • தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
  • 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகன் வேளாங்கண்ணி (வயது 25). இவருடைய மனைவி சுகன்யா. இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த 3 மாதங்களாக வேளாங்கண்ணிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பேய் பிடித்து இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறவே அவரை பூசாரியிடம் அழைத்து சென்று மந்திரிக்கவும் செய்துள்ளனர். இந்தநிலையில் வயலில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு வேளாங்கண்ணி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News