உள்ளூர் செய்திகள்
- வாகனம் மோதி லாரி டிரைவர் பலியானார்.
- சிமெண்டு ஆலைக்கு லோடு ஏற்றி வந்தார்
அரியலூர்
கடலூர் மாவட்டம் புதுகரைபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் யேசுராஜ் (வயது 26), லாரி டிரைவர். இவர் நேற்று காலை அரியலூரில் இருந்து கீழப்பழுவூரில் உள்ள சிமெண்டு ஆலைக்கு லோடு ஏற்றி வந்தார். பின்னர் ஆலையின் வெளியே சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி யேசுராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.