உள்ளூர் செய்திகள்

அரியலூரில் திருக்கல்யாண வைபவம்

Published On 2023-11-20 03:36 GMT   |   Update On 2023-11-20 03:36 GMT
  • அரியலூர் பாலதண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

அரியலூர்,

பாலதண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாண வைபவ விழாவை முன்னிட்டு பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் முருகனுக்கு வள்ளி தொய்வானையுடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

Tags:    

Similar News