உள்ளூர் செய்திகள்

நெல் கொள்முதல் நிலையத்தை திடீர் ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர்

Published On 2023-03-12 13:03 IST   |   Update On 2023-03-12 13:03:00 IST
  • பணத்தை உடனடியாக வங்கியில் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு
  • தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வருகை தந்தார். அதன்படி செந்துறை பகுதிகளில் உள்ள பொன்பரப்பி அரசு பள்ளி, சோழன் குடிக்காடு மற்றும் முள்ளுக்குறிச்சி அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கடந்த ஆண்டு முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.அப்போது படைவெட்டி குடிக்காடு கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் சாகுபடி செய்ய ப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களுடைய நெல்லை 6 கி.மீட்டர் தூரம் கடந்து குழுமூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொடுத்து வந்தனர். அவர்கள் தங்களுக்கு போக்குவரத்து செலவு கூடுதலாக ஆவதால் 12 கிராம மக்களுக்கு தனியாக ஒரு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க பல ஆண்டுகாலம் கோரிக்கை வைத்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் உத்திரவின் பேரில் கடந்த 6 -ந்தேதி படைவெட்டிகு டிகாடு கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.இதை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திடீர் ஆய்வு செய்தார். நாள் ஒன்றுக்கு எவ்வளவு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது எனவும் விரைவாக நெல்லுக்கான பணத்தை வங்கில் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்திரவிட்டனர். இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் 15 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட திட்ட மிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இந்த நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News