உள்ளூர் செய்திகள்

பணம் மோசடி செய்தவர் கைது

Published On 2023-03-10 12:47 IST   |   Update On 2023-03-10 12:47:00 IST
  • பணம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்
  • அரசு வேலை வாங்கித் தருவதாக நடந்தது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் தத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன் மகன் குணசேகரன் (வயது 41). இவர் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக தற்காலிக அடிப்படையில் பணியாற்றியுள்ளார். அப்போது, செந்துறையை அடுத்த பாளையக்குடி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் பிரகாசத்திடம் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக அடிப்படையில் எழுத்தாளர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார். மேலும் பிரகாசத்தின் உறவினர்கள்ள, நண்பர்கள் ஆகியோரிடமும் ஊராட்சிகளில் அரசு வேலை மற்றும் நிரந்தரப் பணி வாங்கித் தருவதாக கூறி வங்கிக் கணக்கு மூலமாகவும், நேரடியாகவும் ரூ.65.35 லட்சம் வரை பெற்றுக் கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார். ஆனால், அவை போலியானவை என்று தெரியவந்ததையடுத்து, பிரகாசம் இது குறித்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, குண சேகரனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News