உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி வாலிபர் பலி

Published On 2023-06-30 12:49 IST   |   Update On 2023-06-30 12:49:00 IST
  • வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
  • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா த.பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 56). இவரது மகன் மணிகண்டபிரபு (21). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை மணிகண்டபிரபு தனது மோட்டார் சைக்கிளில் கீழப்பழுவூரில் உள்ள போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று அவர் விண்ணப்பித்திருந்த ஓட்டுனர் உரிமம் பெற்று கொண்டு மீண்டும் சொந்த ஊரான த.பொட்டகொல்லை கிராமத்திற்கு திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார்.

அப்போது பொய்யூர் சுண்டக்குடி பிரிவு பாதை அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News