உள்ளூர் செய்திகள்

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-09-03 09:26 GMT   |   Update On 2022-09-03 09:26 GMT
  • வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
  • சம்பவத்தன்று மழவராயநல்லூர் பஸ் நிழற்குடையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பிரபாகரனுக்கும், வல்லரசுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மழவராயநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை மகன் பிரபாகரன்(வயது 19). டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் வல்லரசு(20). நண்பர்களான இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாட்டின் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மழவராயநல்லூர் பஸ் நிழற்குடையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பிரபாகரனுக்கும், வல்லரசுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பின்பு வல்லரசு, பிரபாகரனை பார்த்து திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரபாகரன் தனது வீட்டிற்கு வந்து வீட்டில் விவசாய நிலத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர் பிரபாகரனை உடனடியாக மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பிரபாகரனின் தாய் மங்கையர்கரசி விக்கிரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News