உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; முதியவருக்கு 17 ஆண்டுகள் சிறை

Published On 2023-01-12 06:22 GMT   |   Update On 2023-01-12 06:22 GMT
  • சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை
  • மேலும் சிறுமிக்கு ரூ.2 லட்சம் தமிழக அரசு வழங்குமாறும் உத்தரவிட்டார்.

அரியலூர்:

ஜெயங்கொண்டம் அடுத்த ஆண்டிமடம் அருகேயுள்ள திருக்களப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன்(வயது60). இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இளங்கோவனை போக்சோ சட்டத்தில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளித்தது. இதில், இளங்கோவனுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். மேலும் சிறுமிக்கு ரூ.2 லட்சம் தமிழக அரசு வழங்குமாறும் உத்தரவிட்டார். இதையடுத்து இளங்கோவன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ராஜா ஆஜரானார்.

Tags:    

Similar News