உள்ளூர் செய்திகள்

கடை வீதியில் பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

Published On 2023-03-29 11:16 IST   |   Update On 2023-03-29 11:16:00 IST
  • 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
  • நகராட்சி, மாசு கட்டுப்பாட்டு துறையினர் நடவடிக்கை

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஷ்யாம் கானல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை சார்ந்த சுற்றுச்சூழல் துணை பொறியாளர் அகல்யா உள்ளிட்ட நகராட்சி குழுவினர் கடைவீதி பகுதிகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட கப்பு பிளாஸ்டிக் பை உள்ளிட்ட 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கடை வீதியில் உள்ள கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு கடைக்கு 1000 மும் மற்றொரு கடைக்கு 500 என இரண்டு கடைகளுக்கும் சேர்த்து 1500 ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

Tags:    

Similar News